* தாய் போன்றது தர்மம். தந்தை போன்றது நிர்வாகம். இரண்டும் இணைந்தால் நாடு நலம் பெறும். * ஒழுக்கம், நேர்மை மிக்கவர்களால் சமுதாயம் நன்மை அடையும். * கோபத்தால் முகத்தின் அழகு கெடும். அமைதியால் முகம் பொலிவு பெறும். * தியானத்தில் ஈடுபட்டால் கடவுளின் அருள் கிடைக்கும். * நம்பிக்கை, நன்னடத்தை, நல்லொழுக்கமே வெற்றிக்கான வழிகள். * மனிதன் பின்பற்ற வேண்டிய பண்புகளில் அடிப்படையானது அன்பு. * சுதந்திரம் இல்லாத நாடு உயிர் இல்லாத உடல் போன்றது. * கவலைப்படுவதால் எந்தப் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்காது. * துன்பத்தை அனுபவித்தால் தான் சுகத்தின் அருமை தெரியும். * பிழையை திருத்திக் கொள்வதால் அவமானம் ஏற்படாது . * அறிவுக்கு முற்றுப்புள்ளி கிடையாது. வாழும் வரை அறிவுக்கதவு திறந்திருக்கட்டும். * நெற்பயிர் போல மனிதர்கள் பிறந்து வளர்ந்து முதிர்ந்து அறுபடுகிறார்கள். * மதங்களில் வேற்றுமை கிடையாது. கருத்தில் தான் வேற்றுமை உள்ளது. * ஞானமும், பக்தியும் அனைவரும் அடைய வேண்டிய பெருஞ்செல்வம். * உடல் என்னும் கோயிலை துாய்மையுடன் வைத்திருப்பது அவசியம். * படிப்பு, பணத்தால் மனிதனுக்கு தற்பெருமை கொள்வது கூடாது. - வேண்டுகிறார் ராஜாஜி