* உள்ளத்தில் உண்மை இருந்தால் விருப்பம் விரைவில் நிறைவேறும். * கடவுளின் அடிமையாக வாழ்ந்திடு. அவரை மறப்பது நரகத்தை விடக் கொடியது. * கடவுள் உன் உள்ளத்தில் இருக்கிறார். நற்செயல்களே அவருக்கான வழிபாடு. * கடவுளின் கையில் நல்ல கருவியாக இருப்பதை விட பெருமை வேறில்லை. * நல்ல செயல்களை உடனடியாக செய்வது நல்லது. * கட்டுப்பாடு என்பது சுதந்திரத்திற்கு எதிரானது அல்ல. * அன்பும், ஆற்றலும் தனித்து இருந்தால் உலகம் வளர்ச்சி அடையாது. * எந்த சூழலிலும் மன அமைதியை இழக்காதே. * தன் நலத்துடன் பொது நலத்தையும் சிந்திக்க வேண்டும். * கடந்த காலம் பற்றி சிந்திப்பது வீண். அதனால் மனம் தளர்ச்சி அடையும். * அறியாமை என்னும் இருள் வெளியேறினால் தான் மனதில் தெய்வீகம் வெளிப்படும். * கடவுளின் ஆணைப்படி நடக்க வேண்டியது நடந்தே தீரும். பயமில்லாமல் இரு. * துன்பத்தால் வருந்தினாலும் அதுவும் உன் நன்மைக்காகவே. * ஒவ்வொரு உண்மையும் வெளிப்படுவதற்கான நேரத்தை எதிர்நோக்கியிருக்கிறது.