சிவகிரி திரவுபதி அம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2012 11:05
சிவகிரி : சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் வைகாசி பூக்குழி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. சிவகிரி திரவுபதி அம்மன் கோயில் இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி பூக்குழி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 6.50 மணிக்கு மேல் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜைகள் நத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. பூஜைகளை ஆலய பூசாரி மாரிமுத்து மற்றும் குழுவினர் செய்தனர். விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் அம்மன் சயன அலங்காரம், மாங்கனி பறித்தல் அலங்காரம், திருக்கல்யாணம், அர்ச்சனை தபசு, அரவான் களப்பலி, துர்ச்சாதனன் பலி வாங்குதல் போன்ற அலங்காரங்களில் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் நடக்கிறது. 9ம் நாளான ஜூன் 5ம் தேதி காலை கோயில் முன்பு அக்னி வளர்க்கப்பட்டு 4.30 மணிக்கு பூக்குழி நடக்கிறது. 10ம் திருவிழா காப்புகட்டி மண்டப விழாக் குழுவினர் சார்பில் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரோஜாலிசுமதா, செயல் அலுவலர் ராமராஜா மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.