கோவை: கோவையிலுள்ள சிவாலயங்களில், நேற்று நான்காவது சோமவாரத்தையொட்டி, சங்காபிஷேக விழா நடந்தது.கோட்டை சங்கமேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று காலை, ஹோம பூஜைகள் நடைபெற்றன. 108 சங்குகளை கொண்டு, லிங்க வடிவில் சிவன், நந்தீஸ்வரர் அலங்கரிக்கப்பட்டு, பூஜை செய்யப்பட்டன. சிவபெருமானும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலையில் மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.