பல்லடம்: கர்ம வினை அகல நமச்சிவாய மந்திரத்தை நாவார பாடுங்கள் என, காமாட்சிபுரி ஆதீனம் அறிவுறுத்தினார். பல்லடம் அடுத்த, சித்தம்பலம் நவகிரக கோட்டையில் அமாவாசையை முன்னிட்டு மஹா மிருத்யுஞ்ஜய சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது.
வேள்வியை துவக்கி வைத்து காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், உலகில் மனிதராக பிறந்த பயனுக்கு இறைவனை மண்டியிட்டு வழங்க வேண்டும். கடவுள் இல்லாத இடம் எங்கும் இல்லை. காற்று, நீர், நெருப்பு, ஆகாயம் உள்ளிட்டவற்றில் கலந்து நிலத்துக்கு மேல் கடவுள் அருள் பாலிக்கிறார். அந்த இடமே ஆலயங்களாக உள்ளன. அப்படிப்பட்ட ஆலயங்களில் தான் இறை ஆற்றல் அதிகம் உள்ளன. கர்ம வினை அகல ஆலயங்கள் சென்று வழிபடுங்கள். நமசிவாய எனும் மந்திரத்தை நாம் பாடுங்கள். நம் கர்ம வினைகள் அகன்று நல்லதொரு வழி கிடைக்கும் என்றார். முன்னதாக, அமாவாசை சிறப்பு வேள்வி வழிபாடும், அதை தொடர்ந்து, 108 கலச தீர்த்தம் வழிபாடும் நடந்தது. பல்வேறு திரவியங்களால் அம்மை அப்பருக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத் தொடர்ந்து அலங்கார பூஜையும் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.