கார்த்திகை அமாவாசை ; சதுரகிரியில் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15டிச 2020 03:12
வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் நடந்த கார்த்திகை அமாவாசை வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
நேற்று அதிகாலை முதல் தாணிப்பாறையில் பக்தர்கள் குவிந்திருந்த நிலையில் காலை 6:15 மணி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கபட்டனர். கோயிலில் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 16 வகை அபிேஷகங்கள் நடந்தது. சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. ஏற்பாடுகளை அறங்காவலர் ராஜாபெரியசாமி, செயல் அலுவலர் விஸ்வநாத் செய்திருந்தனர். ஸ்ரீவில்லிபுத்துாரில்இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கபட்டன.