தஞ்சாவூர்: சுவாமி விவேகானந்தர், தொண்டு செய்வது தெய்வத்தின் பக்கம் நம்மைக் கொண்டு செல்லும் என்றார். அதன் அடிப்படையில் டெல்டா பகுதியில் பல்வேறு விதமான சேவைகளைத் தொடர்ந்து செய்து வரும் எண்ணங்களின் சங்கமம் என்ற அமைப்பின் 16- ஆம் ஆண்டு தொடக்க விழா தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் 13. 12. 20 அன்று நடைபெற்றது. சேவை அமைப்புகளுக்கான இந்த ஊக்கமூட்டும் விழாவில் மாவட்ட கலெக்டர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். சுவாமி விவேகானந்தரின் வழியில் இந்த 85 தொண்டு நிறுவனங்களும் மேலும் சிறந்த முறையில் சேவையாற்றுவதற்காக கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.