துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. கைலாசநாதருக்கும், சனீஸ்வரருக்கும் சிறப்பு பூஜை செய்கின்றனர். சனி திசை, சனி புத்தி காலத்தில் இழந்த சொத்தை மீண்டும் கிடைக்க எள்தீபம் ஏற்றுகின்றனர். திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலுக்கு ஈடாக விளங்கும் இத்தலம் நவகைலாய தலங்களில் ஒன்றாகும். எப்படி செல்வது: திருநெல்வேலி – திருச்செந்துார் சாலையில் 30 கி.மீ., தொடர்புக்கு: 04630 – 256 492