மனிதர்கள் செய்யும் நன்மை, தீமைக்கு ஏற்ற பாரபட்சம் பார்க்காமல் சனீஸ்வரர் பலன் கொடுப்பார். ஆனால் சனியால் கிடைக்கும் நன்மை கண்டு மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி முன்பு பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டது. திருக்கொள்ளிக்காட்டில் சிவபெருமானை நோக்கி தவமிருந்தார் சனிபகவான். ‘பொங்கு சனியாக’ அவரை சிவபெருமான் மாற்றினார். இவரே இங்கு தனி சன்னதியில் இருக்கிறார். ‘உழைப்பவருக்கே அருள்புரிவேன்’ என்னும் தத்துவத்தின் அடிப்படையில் கலப்பை ஏந்தியபடி இருக்கிறார். திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் கச்சனம் வழியாக 28 கி.மீ., தொடர்புக்கு: 04369 – 237 454