ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று (19 ம் தேதி) ஸ்ரீநம்பெருமாள் கவிரிமான் தொப்பாரை கொண்டை , விமான பதக்கம் , இரத்தினஅபயஹஸ்தம், இரத்தினகலிங்க தோளா, முத்துச்சரம் , பவளமாலை ,காசு மாலை அலங்காரத்தில், அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.