தேனி: தேனி பெத்தாட்சி விநாயகர் கோயிலில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு வண்ண மலர் அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தேனியில் பிரசித்தி பெற்ற பெத்தாட்சி விநாயகர் கோவிலில் மார்கழி வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலையில் விநாயகருக்கு திருமஞ்சணம், பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் விநாயகருக்கு சிறப்பு வண்ண மலர் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர்.