Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க பக்தர்கள் ... பரமக்குடி ஐயப்பன் கோயிலில் டிச.25ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவல் தெய்வம் கருப்பராயன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 டிச
2020
02:12

நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும், லாரி டிரைவர்களின் காவல்தெய்வம், கருப்பராயர், மகா காளியம்மன் சுவாமி ஆகும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் வழியாக, தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், ஊட்டிக்கு பொருட்களை ஏற்றிச் செல்கின்றன. லாரி டிரைவர்களில் பெரும்பாலானவர்கள், வழி ஓரங்களில் உள்ள தெய்வங்களை, வழிபட்டு வாகனங்களை ஓட்டிச் செல்வது வழக்கம். தாங்கள் ஓட்டிச் செல்லும் வாகனம் எவ்வித விபத்தும் ஏற்படாமல் இருக்க வேண்டும், என வழிபடுவர்‌. இது மாதிரியான நிகழ்வுகள் இன்றைய காலத்தில் நடைபெறுகின்றன.

ஆனால் ஊட்டிக்கு சரியான ரோடு வசதி இல்லாத காலத்தில், அங்குள்ள மக்களுக்கு, மளிகைப் பொருட்களையும், உணவு பொருட்களையும் மாட்டு வண்டிகளில் ஏற்றிச் சென்றுள்ளனர். இதற்காக வெளியூர்களில் இருந்து, மாட்டு வண்டிகளை ஓட்டி வருபவர்கள், கோவில்கள் உள்ள இடங்களில் தங்கி, சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். அந்த வகையில் மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில், பிளாக் தண்டர் அருகே, சாலையின் ஓரத்தில் கருப்பராயர், கன்னிமார், மகாகாளியம்மன், முனியப்பன் ஆகிய நான்கு காவல் தெய்வங்கள் உள்ளன. இந்த கோவில் முன்பு, லாரி டிரைவர்கள் தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு செல்கின்றனர்.

இதுகுறித்து இக்கோவில் பூசாரி வெள்ளிங்கிரி கூறியதாவது: ஊட்டி சாலையில் உள்ள கன்னிமார், கருப்பராயர் கோவில், 200 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. எனது தாத்தாக்கள், அப்பா, சித்தப்பா, பெரியப்பா, எனது சகோதரர்கள் ஆகியோர், தலைமுறை தலை முறையாக பூஜை செய்து வருகிறோம். எனது தாத்தா அடிக்கடி கூறும் தகவல், நீலகிரி மாவட்டத்துக்கு மாட்டு வண்டிகளில் உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்பவர்கள், இரவில் கோவிலில் தங்கி விடுவர். காலையில் எழுந்து சுவாமியை வழிபட்டு, ஊட்டிக்கு செல்வர். வழியில் சாலையில் அமைந்துள்ள தெய்வங்கள் என்பதால் இதை காவல் தெய்வங்கள் என கூறி வருகின்றனர். கல்லாறு பகுதியில் உள்ள விவசாயிகள், இந்த சுவாமிகளை, தங்கள் விளை நிலங்களின், காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர். மேலும், விவசாயிகள், அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப, கோவிலில் பொங்கல் வைத்து பூஜை செய்து வழிபடுகின்றனர். இக்கோவிலில், ஆடி 18 பெருக்கு அன்று கன்னிமார் பூஜையும், விழாவும் நடைபெறும். இவ்வாறு பூசாரி வெள்ளியங்கிரி கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; காஞ்சிபுரம் செவிலிமேடில், ஸ்ரீமத் ராமானுஜர், சாலை கிணறு கோவில் உள்ளது. இங்கு ராமானுஜருக்கு ... மேலும்
 
temple news
திருப்பூர், காங்கயம் – சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் உள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில், புடவை ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரியில் ஐந்து நாட்கள் உபன்யாசம் நிகழ்ச்சி துவங்கியது. புதுச்சேரி விட்டல் சேவா ... மேலும்
 
temple news
தர்மபுரி; அதியமான்கோட்டை தட்சிணகாசி காலபைரவர் கோவிலில், நேற்று நடந்த தேய்பிறை அஷ்டமி வழிபாட்டில், ராஜ ... மேலும்
 
temple news
மதுரை; மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. தவிர புளியோதரை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar