பரமக்குடி ஐயப்பன் கோயிலில் திருக்கல்யாணம் ஆண்டு தோறும் நடப்பது வழக்கம். இங்கு புஷ்கலாதேவிக்கு தனிசன்னதி உள்ளது.டிச., 24 அன்று இரவு 7:00 மணிக்குநிச்சயதார்த்த வைபவத்துடன் விழா துவங்கும். மறுநாள் டிச., 25 ல்காலை 9:00 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு, திருமாங்கல்யம்மேள, தாளத்துடன் நகர்வலம் வருவர்.பின்னர் பெண் வீட்டார் அழைப்பு, மாலை மாற்று தலுக்குப் பின்,காலை 10:00 மணியளவில் புஷ்கலா தேவிக்கும் - தர்மசாஸ்தாவுக்கும் திருக்கல்யாணம் நடக்கவுள்ளது. தொடர்ந்து திருமண சடங்குகள் நிறைவடைந்து, தீபாராதனை காண்பிக்கப்படும். பகல் 12:00 மணிக்குஅன்னதானம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி கஜவாகனத்தில்வீதியுலா வரவுள்ளார்.இதனையடுத்து டிச., 26 அன்று மண்டபூஜை, 108 சங்காபிேஷகம்நடக்கவுள்ளது. ஏற்பாடுகளை பரமக்குடி தர்மசாஸ்தா சேவாசங்கத்தினருடன் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.