சொர்க்கவாசல் திறப்பு விழா பக்தர்களுக்கு அனுமதியில்லை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19டிச 2020 02:12
விழுப்புரம் : வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவில், பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை. கலெக்டர் அண்ணாதுரை செய்திக்குறிப்பு;விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய வைணவ கோவில்களில், வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள, வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா, அந்தந்த கோவில் வழக்கத்தின்படி நடைபெறும். இதில், கோவில் பணியாளர்கள் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு பிறகு, அரசு தெரிவித்துள்ள, வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து, வரிசையில் சென்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.