மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதேசி விழாவின் பகல்பத்து நிகழ்ச்சியான படியேற்ற சேவை, பார்த்தசாரதி அலங்காரத்தில் பெருமாள் காட்சி, தருமபுர ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட திருவண்ணாமலை பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பஞ்ச அரங்கங்களுல் ஒன்றானதும், 108 வைணவ ஆலயங்களுல் 22 ஆலயமான பரிமள ரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சந்திரம் வழிபட்டு சாபவிமோசனம் பெற்ற இந்த ஆலயத்தின் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா கடந்த 14ம் தேதி துவங்கி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. பகல்பத்து விழாவின் 5ம் நாளான இன்று பெருமாள் பார்த்தசாரதி அலங்காரத்தில் புறப்பட்டு உள்பிரகார வீதியுலா வந்தார். திருவந்திக்காப்பு மண்டபத்தில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து படியேற்ற சேவை நடைபெற்றது. அப்போது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் படியேற்ற தமிழ்பாடல்களை; கூட்டாக பாடி வழிபாடு செய்தனர். தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.