பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20டிச 2020 10:12
நாகை : பெருஞ்சேரி வாகீஸ்வரர் சுவாமி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் கனமழையில் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு சுவாதந்தர நாயகி சமேத வாகீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இ க்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 21ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷே கம் செய்யப்பட்டுள்ளது. ஆகம முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். ஆனால் 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திருப்பணிகள் செய்ய ப்படாததால் கோயில் சிதிலமடையத் தொடங்கியுள்ளது. கல்விக்கு அரசியான சரஸ்வதி, சந்திரன். வியாழனின் மனைவி தாரை, தத்தசோழன் வழிபட்டு பேறு பெற்ற தலம். வியா ழன் தேவகுருவாக பதவி ஏற்ற தலம் என்பதால் குருபரிகாரத்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. இழந்ததை மீட்டு தருவதில் விரைந்து அருள்புரியும் கலியுக பைரவர் வீற் றிருக்கும் அற்புத ஸ்தலம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருந்து வருகிறது. நிவர் புயல், புரெவி புயலால் தொடர்ந்து கன மழை பெய்தபோது கோயில் சுற்றுச்சுவர்கள் பலவீனமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததில் சிதிலமடைந்திருந்த கோயில் நுழைவுவாயில் பக்கவா ட்டுச்சுவர் நேற்று இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு நடவடிக்கை எடு க்க வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.