Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பார்த்தசாரதி அலங்காரத்தில் ... கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட பலமாகும் கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: பலவீனம் கூட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது
எழுத்தின் அளவு:
பெருஞ்சேரி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது

பதிவு செய்த நாள்

20 டிச
2020
10:12

நாகை : பெருஞ்சேரி வாகீஸ்வரர் சுவாமி கோயில் நுழைவு வாயில் பக்கவாட்டு சுவர் கனமழையில் இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பெருஞ்சேரி கிராமத்தில் அருள்மிகு சுவாதந்தர நாயகி சமேத வாகீஸ்வரர் சுவாமி கோயில் உள்ளது. 800 ஆண்டுகள் பழமையான இ க்கோயில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த 21ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷே கம் செய்யப்பட்டுள்ளது. ஆகம முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். ஆனால் 21 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் திருப்பணிகள் செய்ய ப்படாததால் கோயில் சிதிலமடையத் தொடங்கியுள்ளது. கல்விக்கு அரசியான சரஸ்வதி, சந்திரன். வியாழனின் மனைவி தாரை, தத்தசோழன் வழிபட்டு பேறு பெற்ற தலம். வியா ழன் தேவகுருவாக பதவி ஏற்ற தலம் என்பதால் குருபரிகாரத்தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது. இழந்ததை மீட்டு தருவதில் விரைந்து அருள்புரியும் கலியுக பைரவர் வீற் றிருக்கும் அற்புத ஸ்தலம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில் பல ஆண்டுகளாக திருப்பணி செய்யப்படாமல் இருந்து வருகிறது. நிவர் புயல், புரெவி புயலால் தொடர்ந்து கன மழை பெய்தபோது கோயில் சுற்றுச்சுவர்கள் பலவீனமடையத்தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக கனமழை பெய்ததில் சிதிலமடைந்திருந்த கோயில் நுழைவுவாயில் பக்கவா ட்டுச்சுவர் நேற்று இடிந்து விழுந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். பிரசித்தி பெற்ற இக்கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய அரசு நடவடிக்கை எடு க்க வேண்டுமென்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar