மனிதர்கள் தாங்கள் தண்டிக்கப்படுகிற போது ஆண்டவரைக் கடிந்து கொள்கிறார்கள். காரணம் இல்லாமல் ஆண்டவர் தண்டனை கொடுப்பதுஇல்லை. பின்னால் வருவதை அறிந்தே அவ்வாறு செய்கிறார்.
ஒரு வாலிபர் விபத்துக்குள்ளாகி இரு கால்களையும் இழந்தார். மரக்கால்களைப் பொருத்திக் கொண்டார். அவர் ஒரு முறை ஆப்பிரிக் காவுக்கு சென்ற போது காட்டுவாசிகள் கடத்திச் சென்றனர். அவர்களின் தலைவன்,இன்று நமக்கு நல்ல வேட்டை. இவனது மாமிசத்தை உண்போம். அதற்கு முன்னதாக கை, கால்களை வெட்டி சூப் போடுங்கள்” என உத்தரவிட்டான்.
காட்டுமிராண்டிகள் வாலிபனின் கால்களை வெட்ட முயன்ற போது, கடினமானதாக இருப்பதை பார்த்தனர். கட்டை இருப்பது கண்டு பயந்தனர். வாலிபனின் காலிற்குள் கட்டை இருப்பதை தலைவனிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியான தலைவன், இவரது கால்கள் நம் போல இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது. இவர் ஏதோ அதிசயமானவராக இருக்கிறார். இவரை துன்புறுத்தாதீர்கள்” என்றதோடு வாலிபரை குருவாகவும் ஏற்றான். அதன்பின் வாலிபர் அவர்களிடமிருந்து தப்பினார். பலவீனமாக நினைப்பது கூட கர்த்தரின் கிருபையால் பலமாக மாறும். ஆண்டவர் எப்போதும் மனிதனுக்கு தீமை செய்வதே இல்லை.