திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த கூடலூர்குடிகாடு வள்ளி,தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாத சஷ்டியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
திட்டக்குடி அடுத்த கூடலூர் குடிகாடு கிராமத்தில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் மார்கழி மாதம் துவங்கியது முதல் வழிபாடு நடக்கிறது. இன்று மார்கழி சஷ்டியையொட்டி சுப்ரமணியர், வள்ளி, தெய்வானை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. தொடர்ந்து மகா தீபாராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. பரமசிவ குருக்கள் பூஜைகளை செய்து வைத்தார். பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், மாரியம்மன் கோவிலிலும் மார்கழி மாத சிறப்பு வழிபாட்டையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. கிராம பொதுமக்கள் வழிபாட்டில் பங்கேற்றனர்.