பதிவு செய்த நாள்
21
டிச
2020
12:12
நாமக்கல்: மார்கழி முதல் ஞாயிறை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
நாமக்கல்லில், ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை, தமிழ், ஆங்கில, தெலுங்கு வருடப்பிறப்புகள், அமாவாசை, பவுர்ணமி, ஆஞ்சநேயர் ஜெயந்தி உள்ளிட பல்வேறு விழாக்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அந்த வகையில் நேற்று, மார்கழி மாத முதல் ஞாயிறை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பஞ்சாமிர்தம், தேன், பன்னீர், நல்லெண்ணெய், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, வரிசையில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.