Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாமக்கல் ஆஞ்சநேயருக்கு சிறப்பு ... சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு கொரோனா சான்று கட்டாயம் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டில்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு
எழுத்தின் அளவு:
டில்லி குருத்வாராவில் பிரதமர் மோடி வழிபாடு

பதிவு செய்த நாள்

21 டிச
2020
12:12

புதுடில்லி:சீக்கிய மத குரு, குரு தேஜ் பகதுாரின் நினைவு தினத்தையொட்டி, டில்லியில் உள்ள ரகாப் கஞ்ச் குருத்வாராவில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சிறப்பு வழிபாடு நடத்தினார். மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, டில்லி எல்லைப் பகுதியில், கடந்த சில வாரங்களாக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பெரும்பாலானோர், பஞ்சாபை சேர்ந்த சீக்கியர்கள்.

திடீர் வருகை: இதற்கிடையே, சீக்கிய மதத்தின் ஒன்பதாவது மத குருவான, குரு தேஜ் பகதுாரின் நினைவு தினம், நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது. டில்லியில் உள்ள, ரகாப் கஞ்ச் குருத்வாராவில், குருதேஜ் பகதுாரின் உடல், 1675ல் தகனம் செய்யப்பட்டது.எனவே, இந்த குருத்வாராவில், அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இந்நிலையில், அந்த குருத்வாராவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று காலை வருகை தந்தார். குருத்வாராவில், பிரதமர் மோடி, சீக்கிய முறைப்படி சிறப்பு வழிபாடு நடத்தினார். பிரதமரின் இந்த திடீர் வருகையால், குருத்வாராவில், பாதுகாப்புக்காக போலீஸ் குவிக்கப்படவில்லை. பக்தர்களை கட்டுப்படுத்த எந்தத் தடைகளும் விதிக்கப்படவில்லை.

நானும் ஒருவன்:  இதுகுறித்து, பிரதமர் மோடி டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளதாவது:இன்று காலை, குரு தேஜ் பகதுார் உடல் தகனம் செய்யப்பட்ட, வரலாற்று சிறப்புமிக்க ரகாப் கஞ்ச் குருத்வாராவில், வழிபாடு செய்தேன்.நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன். குரு தேஜ் பகதுாரின் கருணையால் ஈர்க்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களில், நானும் ஒருவன்.இவ்வாறு, அதில் குறிப்பிட்டுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று நாகசதுர்த்தி நாளில் நாகர்சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபடுவர். புற்றுக்கு பால் ஊற்றுவர். ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கேரளா;மனைவி ஷாலினி மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் பகவதி கோயில் வருகையின் போது அஜித் குமாரின் ஆன்மீக ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar