பதிவு செய்த நாள்
21
டிச
2020
12:12
சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், மார்கழி தனுர் மாத பூஜையில் ஆண்டாளும் கிருஷ்ணரும் சேர்த்து சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி உற்சவத்தையொட்டி, வரும், 25 காலை, 5:00 மணிக்கு, சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அதில் பங்கேற்க, ஆன்லைனில் முன்பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கான ரசீது வைத்திருப்பவர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதனால், https://tnhrce.gov.in/ என்ற ஆன்லைன் முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, ஜன., 4 வரை, பகல் பத்து உற்சவம் நடக்கிறது. இத்தகவலை கோவில் செயல் அலுவலர் குமரவேல் தெரிவித்துள்ளார்.