திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் யோக பைரவருக்கு ஆறு நாட்கள் நடந்தசம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் வளர்பிறை பிரதமை திதி முதல் சஷ்டி திதி வரை ஆறு நாட்கள் சம்பக சஷ்டி விழா நடைபெறும். காலை, மாலை அஷ்ட பைரவருக்கு யாகம் நடைபெறும். இம்முறை கொரோனா தடுப்பு நடவடிக்கையாக யாகம் நடைபெறவில்லை. டிச. 15ல் விழா துவங்கியது. தொடர்ந்து காலையில் மட்டும் யோகபைரவருக்கு சிறப்பு அபிேஷக, தீபாராதனை நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு கோயில் குருக்கள் பாஸ்கர் அஷ்டோத்ர பைரவ மந்திரம் ஒலிக்க மூலவர் பைரவருக்கு அபிேஷக, ஆராதனை நடந்தன. யோக பைரவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு தீபாராதனையுடன் சம்பக சஷ்டி விழா நிறைவடைந்தது.