வாடிப்பட்டி : மதுரை பொதும்பு கலியுக மெய்ய அய்யனார் கோயில் உற்ஸவ விழா டிச.,15 துவங்கி 5 நாட்கள் நடந்தது. சிம்ம வாகனத்தில் அம்மச்சியார் அம்மன் புறப்பாடு நடந்தது. சேஷ வாகனத்தில் அய்யனார் எழுந்தருளினார். டிச.,17 சீலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையை தொடர்ந்து எருதுகட்டு விழா நடந்தது.டிச.,18 குதிரை வாகனத்திலும், டிச.,19 கள்ளழகர் கோலத்தில் பூப்பல்லக்கிலும் கலியுக மெய்ய அய்யனார் சுவாமி எழுந்தருளினார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்திருந்தனர்.