பதிவு செய்த நாள்
21
டிச
2020
03:12
பரமக்குடி : பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தனிசன்னதியில் உள்ள பைரவருக்கு சம்பக சஷ்டி விழா நடந்தது. டிச., 14 மாலை 7:00 மணிக்கு சித்திவிநாயகருக்கு அனுக்ஞை தீபாராதனை நடந்தது.டிச.,15 தொடங்கி, டிச.,20 வரை, பைரவருக்குஹோமம், அபிேஷகம் நிறைவடைந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தினமும் பைரவர் விபூதிகாப்பு, பச்சைசாத்தி, சிவப்பு, வெள்ளை சாத்தி அலங்காரத்தில் காணப்பட்டார்.நேற்று காலை 6:00 மணி தொடங்கி சம்பக சஷ்டி ஓம் அதி சந்துஷ்டபைரவ யாகம், பூர்ணாகுதி நடந்தது. அப்போது சித்தி விநாயகர், சுந்தரேஸ்வரர், மீனாட்சி, பைரவர், முருகப்பெருமானுக்கு விசேஷ அபிேஷகம்நடந்தது. மாலை 6:00 மணிக்குஅஷ்ட வித்யார்ச்சனை, புஷ்பாஞ்சலி நடந்தது.இன்று காலை 10:00 மணிக்கு பைரவருக்கு வெள்ளி கவசம்அணிவிக்கப்பட்டு,பாவாடை நைவேத்தியம், தீபாராதனையும், 12:00 மணிக்கு அன்னதானம்நடக்கிறது. ஏற்பாடுகளை பைரவர் அஷ்டமி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.