* பக்திக்கு மிஞ்சிய பரிகாரமில்லை. கடவுள் நினைத்தால் தான் எதுவும் கிடைக்கும். * குறிக்கோளைப் பற்றி ஆழ்ந்து யோசித்தால் விரைவில் அதை அடையலாம். * மனதில் கருணை இருந்தால் மட்டுமே கடவுளின் அருளைப் பெற முடியும். * உணவைக் கூட மறக்கலாம். தினமும் தியானம் செய்ய மறக்க கூடாது. * கடவுள் நம்பிக்கை இல்லாதவரும் தியானம் செய்தால் நன்மை அடையலாம். * துணிகளை வெளுக்க வழியிருக்கிறது. ஆனால் மனம் வெளுக்க வழியில்லையே! * மனதைக் கட்டுப்படுத்துங்கள். வேண்டாத விஷயங்களை அனுமதிக்காதீர்கள். * அன்பே சிறந்த தர்மம். எல்லா உயிர்கள் மீதும் அன்பு செலுத்துங்கள். * உண்மையான அன்பு கொண்டவர் யார் மீதும் கோபம் கொள்வதில்லை. * தெய்வம் அறிவுக் கடலாக இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் அதில் ஒரு துளி. * அன்பு பொறுத்துக் கொள்ளும். அன்பிருக்கும் இடத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. * பேச்சு, கொள்கை அளவில் அன்பிருந்தால் போதாது. செயலிலும் வெளிப்படுத்துங்கள். * கோபத்திற்கு ஆளாகும் மனிதன் தனக்குத் தானே நெருப்பு வைத்துக் கொள்கிறான். * சிலையில் மட்டும் கடவுளைக் காணாதீர். எல்லா உயிர்களிலும் அவர் வாழ்கிறார். * மலர்ந்த முகம் இனிய சொல் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.