* போதும் என்ற மனதுடன் வாழ்வதே நிறைவான செல்வம். * வீண் விரயம் செய்வோரை இறைவன் நேசிப்பதில்லை. * பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். * இடது கையால் எதையும் வாங்கவோ, கொடுக்கவோ வேண்டாம். * ரகசியமாகச் செய்யப்படும் தர்மம் இறைவனின் கோபத்தை தணிக்கும். * பொய் சாட்சி அளிப்பது பெரும் பாவங்களில் ஒன்று. * தண்ணீர், நெருப்பு, மேய்ச்சல் நிலம் அனைவருக்கும் பொதுவானது. * மானக்கேடான செயல்களின் அருகே செல்லாதீர்கள். * நற்பணியாற்றுங்கள். இறையருளால் வெற்றி பெறுவீ்ர்கள். * பொறுமை மிக்கவர்கள் இறைவனின் நேசத்திற்கு உரியவர்கள். – நபிகள் நாயகம்