* ஒற்றுமையுடன் வாழுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார். * செய்ய நினைக்கும் செயல்களை ஆற்றல் உள்ள போதே செய்து முடியுங்கள். * எதிரி அளிக்கும் கறி விருந்தை விட அன்பானவர் தரும் மரக்கறி உணவு சிறந்தது. * அன்பு பொறுமை மிக்கது. எப்போதும் நன்மையே செய்யும். * அன்பு தற்புகழ்ச்சியோ, ஆணவமோ கொள்வதில்லை. * உங்களைத் துன்புறுத்துவோருக்கும் வாழ்த்து சொல்லுங்கள் * இனிமையுடன் பேசினால் உடலும், உள்ளமும் மகிழ்ச்சி பெறும். * நெற்றி வியர்வை நிலத்தில் விழும்படி உழைத்து உண்ணுங்கள். * சிறிது சிறிதாக சேர்ப்பவரின் செல்வம் பெருகிக் கொண்டே போகும். * தொலைவில் இருக்கும் உடன் பிறந்தவரை விட அருகிலுள்ள நண்பர் மேலானவர். * எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர்களை துன்பம் நெருங்காது.