தேனி-வத்தலக்குண்டு சாலையில் 25 கி.மீ., துாரத்திலுள்ள தெய்வனாம்பதியில், மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள கருவறையின் கதவு திறக்கப்படுவதே இல்லை. அடைத்திருக்கும் கதவுக்குப் பின்னே 16கால் மண்டபமும், அதில் அம்மன் பெட்டியும் உள்ளது. மண்டபத்தின் மீது விதானத்தில் கவுளியின் (பெரிய பல்லி) உருவம் உள்ளது. கவுளிச் சத்தத்தைக் கொண்டு குறி சொல்லும் வழக்கம் இங்குள்ளது. பக்தர்கள் பூஜைக்காக கொடுக்கும் நெய் பானைகளில் ஈயோ, எறும்போ மொய்ப்பதில்லை.