கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றால் ஆடம்பர வாழ்வு அமையும். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்திற்கு 3, 6, 8, 12 ராசிகளில் மறைந்தால் யோகபலன் குறையும். இதற்கான பரிகாரம் செய்ய வாழ்வு மேம்படும். வெள்ளிக்கிழமை மாலையில் விளக்கேற்றி மகாலட்சுமிக்கு வெண்பொங்கல், வெள்ளை மொச்சை, சுண்டல் நிவேதனம் செய்து ஸ்ரீலட்சுமி துதி, மகாலட்சுமி அஷ்டகம், 108 போற்றி சொல்லி வழிபடலாம். சுக்கிரனுக்கு உகந்த பூஜைகளான பவுர்ணமி பூஜை, சுவாசினி பூஜை, குமாரி பூஜைகளை செய்வது அல்லது பங்கேற்பதும் நன்மையளிக்கும். சுக்கிரனுக்குரிய மந்திரத்தை பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தன்றோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ 108 முறை சொல்வது மிக நல்லது. ‘‘ஹிம்குந்த ம்ருணாலாபம்தைத்யானாம் பரமம் குருசர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம்பார்க்கவம் ப்ரணமாம் யஹம்’’ பனித்துளி, முல்லை, தாமரை போன்ற மலர்களைப் போல வெண்ணிறம் கொண்டவரே! அசுரர்களின் குருவாக திகழ்பவரே! சாஸ்திர ஞானத்தில் வல்லவரே! பிருகு முனிவரின் புதல்வரே! சுக்கிர பகவானே! உம்மை போற்றுகிறேன்.