Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வினை தீர்க்கும் விநாயகர் அகவல் சனிப்பெயர்ச்சி பலன் தரும் பரிகாரங்கள்! சனிப்பெயர்ச்சி பலன் தரும் ...
முதல் பக்கம் » துளிகள்
கட்டிக் காப்பார் கால பைரவர்
எழுத்தின் அளவு:
கட்டிக் காப்பார் கால பைரவர்

பதிவு செய்த நாள்

24 டிச
2020
12:12

சிவபெருமானின் பலவிதமான கோலங்களில் ஒன்று பைரவர்.  இவரது 64 வடிவங்களில் கால பைரவர் சிறப்பு மிக்கவர். பக்தர்கள் விரும்பும் வரத்தை சரியான காலத்தில் அருள்பவர் இவர். உயிரை பறிக்கும் காலன் போல நம்மை வாட்டும் துன்பங்களில் இருந்து விடுவிப்பவர். இக்கட்டான சூழ்நிலையில் இவரை சரணடைந்தால் நிச்சயம் கரை சேர்ப்பார். தீராக் கடன், குடும்ப பிரச்னை, குழந்தையின்மை, நீதிமன்ற வழக்குகளில் இருந்து நம்மை விடுவிப்பவர் கால பைரவ மூர்த்தி. காசியின் காவல் தெய்வமான இவருக்கு பூஜை நடந்த பிறகே காசி விஸ்வநாதருக்கு பூஜைகள் நடக்கின்றன.  


காசியில் உள்ள கோயில்களை எல்லாம் வழிபட்டபின் கடைசியாக காலபைரவரை வழிபட்டால் மட்டுமே காசி யாத்திரை முழுமை பெறும். யாத்திரை சென்ற பலனும் நமக்கு கிடைக்கும். பைரவரின் உடலில் நவக்கிரகங்களும் அடங்கியிருப்பதால் வழிபட்டவருக்கு கிரக தோஷம் மறையும்.  ஞாயிறு ராகு காலம், தேய்பிறை அஷ்டமி வழிபட உகந்தவை. தேய்பிறை அஷ்டமியன்று விளக்கேற்றி செவ்வரளி அர்ச்சனை, எலுமிச்சை மாலை, மிளகு கலந்த உளுந்த வடை, காரமான புளிச்சாதம் நைவேத்யம் செய்ய பிரச்னைகள் பறந்தோடும்.  
வாழ்க்கை, தொழிலில் எதிரியால் தொல்லை ஏற்படும் போது, தேய்பிறை அஷ்டமி வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. இதனால் எதிரிகள் இருக்குமிடம் தெரியாமல் விலகிச் செல்வர்.  தீயசக்திகள் இருப்பதாக உணர்ந்தால் பைரவருக்கு அபிஷேகம் செய்து தீர்த்தத்தை வீட்டில் தெளிக்க பிரச்னை தீரும். பைரவரின் வாகனமான நாய்க்கு உணவு அல்லது பிஸ்கட் அளித்து பசி போக்கினால் பைரவரின் அருள் கிடைக்கும். ஞாயிறன்று ராகு காலத்திலும், தேய்பிறை அஷ்டமி நாளிலும் செய்வது பன்மடங்கு பலன் தரும்.

 
மேலும் துளிகள் »
temple news
மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1863 ஜன., 12ம் தேதி பிறந்தவர், விவேகானந்தர். இயற்பெயர், நரேந்திரநாத் ... மேலும்
 
temple news
சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்
 
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar