* கடவுளை வெளியுலகத்தில் தேடுவது அறியாமை. * கடவுளிடம் சரணடைந்தால் பாவத்தில் இருந்து விடுபடலாம். * பசுவைத் தேடும் கன்று போல, கடவுளைக் காண மனம் ஏங்க வேண்டும். * பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் பயனில்லை. * பக்தியுள்ளவனாக வாழு. அதே நேரம் மூடத்தனத்திற்கு இடம் அளிக்காதே. * தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு துணை நிற்கும். * அமைதியாக இருப்பதே ஞானத்தின் அடையாளம். * கடவுளுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என யாருமில்லை. * கடவுளின் அருள் இல்லாவிட்டால் அறியாமையில் இருந்து விடுபட முடியாது. * ஆணவம் இருக்கும் வரை கடவுளை நாம் நெருங்க முடியாது. * பெண்கள் அனைவரும் அன்னை பராசக்தியின் அம்சமே. * எந்த நிலையிலும் கலங்காதவனே உண்மையான ஞானி. * எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன. * ஆராய்ச்சி மனப்பான்மையுடன் கடவுளை அணுகாதே. * முழு நம்பிக்கையுடன் கடவுளின் திருவடியில் சரணடை. * கடவுளை அடைய எளிய வழி பக்தி. * கற்பக மரம் போல வழங்கும் வள்ளல் கடவுளே ஒருவரே.