பாதிரியார் ஒருவர் நாயகத்தை சந்திக்க வந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் நேரம் நெருங்கவே ஜெபம் செய்தபின் வருவதாக தெரிவித்தார். ‘‘இந்த கடும் வெயிலில் வெளியே போகாதீர்கள். இந்த பள்ளிவாசலின் ஒரு பகுதியிலேயே ஜெபம் செய்யலாம்’’ என்றார். அனைவரும் நம் சகோதர்கள் போன்றவர்களே. அவர்கள் மீது அன்பு செலுத்துவது நம் கடமை. * சகோதரரை மலர்ந்த முகத்துடன் சந்திப்பதும் நற்செயலே. * உன் வாளியிலுள்ள தண்ணீரை சகோதரரின் வாளியில் ஊற்றுவதும் நற்செயலே.