* பொறாமையை தவிருங்கள். அது நன்மையை விழுங்கி விடும். * நேர்மையுடன் வாழ்பவன் பயப்படவோ, துன்பப்படவோ மாட்டான். * வந்து செல்லும் பயணிகளைப் போல உலகில் வாழுங்கள். * கோபம் எழுந்தால் மவுனமாக இருங்கள். * உள்ளத்தை உறுத்தும் இழிசெயல்களை செய்யாதீர்கள். * தர்மம் செய்பவனுக்கு இறையருளால் செல்வம் குறையாது. * மனத்துாய்மை இறை நம்பிக்கையின் ஓர் அங்கம். * கருணை இல்லாதவன் மீது இறைவன் கருணை காட்டுவதில்லை. * தானியத்தை பதுக்குபவன் தண்டனைக்குரிய குற்றவாளி. * நல்லெண்ணத்தால் இறைவழிபாடு முழுமை பெறும். * தேவையானதை மட்டும் உண்ணுங்கள்; எதையும் வீணாக்காதீர்கள்.