பழநி : பழநி மலைக் கோவில் செல்ல, ரோப் கார் சேவை நேற்று முதல் மீண்டும் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி மலைக் கோவிலுக்கு பக்தர்கள் எளிதாக செல்ல, ரோப் கார் இயக்கப்படுகிறது. கொரோனா முன்னெச்சரிக்கையாக, ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது. தற்போது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பல மாதங்கள் இடைவெளிக்கு பின், நேற்று காலை, 9:30 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின், ரோப் கார் சேவை மீண்டும் துவங்கியது.