திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெய்வானை அம்மனுக்கு எண்ணெய் காப்பு திருவிழா டிச., 31ல் துவங்குகிறது. கோயிலில் உற்ஸவர் தெய்வானை மட்டும் புறப்பாடாகி, ஆஸ்தான மண்டபத்தை 3 முறை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளுவார். சிவாச்சாரியார்களால் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு மூலிகை எண்ணெய் சாத்துப்படி செய்யப்படும்.அம்மன் கிரீடத்தில் கருமுடி சாத்துப்படியாகி, வெள்ளி சீப்பால் தலைவாருதல், தங்க ஊசி மூலம் பல் துலக்குதல், மை இட்டு கண்ணாடி பார்க்கும் நிகழ்ச்சி நடக்கும். திருவிழா நாட்களில் பக்தர்களுக்கு மூலிகை எண்ணெய் பிரசாதம் வழங்கப்படும். ஜன.,4ல் திருவிழா நிறைவடையும்.