Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடராஜ ... புதிய நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம்! புதிய நம்பிக்கையுடன் புத்தாண்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நலன் வேண்டி அரச, வேப்ப மரத்துக்கு திருமணம்
எழுத்தின் அளவு:
உலக நலன் வேண்டி அரச, வேப்ப மரத்துக்கு திருமணம்

பதிவு செய்த நாள்

31 டிச
2020
12:12

பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே அப்பநாயக்கன் பாளையத்தில், உலக நலன் வேண்டி அரசமரம் மற்றும் வேப்ப மரத்துக்கு, ஹிந்து முறைப்படி சடங்குகளுடன் திருமணம் நடந்தது.

துடியலூர் அருகே அப்பநாயக்கன் பாளையம் கிராமத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. கோயில் தல விருட்சமாக அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது. இங்கு உலக நலன் வேண்டி, இக்கோயிலில் உள்ள அரச மரத்தை ஆண் கடவுளாகவும், வேப்பமரத்தை பெண் கடவுளாகவும் பாவித்து, திருமணம் செய்து வைப்பது என, கிராம மக்கள் முடிவு செய்தனர். இதில், கிராம மக்கள், அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில், அரச மரத்துக்கு பட்டு வேஷ்டி, பட்டு துண்டும், வேப்ப மரத்திற்கு பட்டு புடவையும் எடுத்து மரங்களைச் சுற்றி, உடுத்தி, மலர் மாலைகள் அணிவித்தனர். புரோகிதர்களை அழைத்து, யாக குண்டம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஓதி, திருமண நிகழ்ச்சியை நடத்தினர். இதில், மூன்று தம்பதிகள் கன்னிகா தானம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். தொடர்ந்து, தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து, திருமணத்துக்கு வந்திருந்த அனைவரிடமும் ஆசீர்வாதம் பெற்று, மூன்று பெண்கள் இணைந்து, இரண்டு மரங்களை தாலியால் சுற்றி, மூன்று முடிச்சு போட்டு தாலி கட்டினர். ஹிந்து முறைப்படி, அனைத்து திருமண சடங்குகளும் நடந்தன. திருமணத்திற்கு வந்து இருந்த பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டன. அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளானோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar