பதிவு செய்த நாள்
02
ஜன
2021
02:01
புதுச்சேரி: புத்தாண்டு தினத்தையொட்டி, கவர்னர் மாளிகையில் உள்ள பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கவர்னர் கிரண்பேடி தலைமையில் கவர்னர் மாளிகை அதிகாரிகள்,
ஊழியர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பின்பு, கவர்னர் மாளிகை அதிகாரிகள் குழுவினர், காணொலி மூலம் கவர்னர் கிரண்பேடிக்கு, வாழ்த்து கூறினர். பின்னர், பொங்கல் பண்டிகை தினத்தில் இருந்து கவர்னர் மாளிகையை ஆன்லைன் வீடியோ மூலம் மக்கள் பார்க்க ஏற்பாடு செய்வது. கவர்னர் மாளிகை பணியாளர்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பது. கொரோ னா தொற்று காரணமாக மக்களின் குறைகளை காணொ லி மூலம் கேட்பது. சாலை சீரமைப்பு சம்மந்தமான புகார்கள் மீது பொதுப்பணித்துறையின் மூலம் நடவடிக்கை எடுத்தல் , நீர் நிலைகள் ஆக்கிரமிப்பின் மீது வந்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து காணொலி மூலம் கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.