ரெகுநாதபுரம் : ஒவ்வொரு ஆண்டும்ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலிலிருந்து மண்டல பூஜையை முன்னிட்டு, சபரிமலைக்கு பெருவழி, சிறுவழியாக யாத்திரை செல்வது வழக்கம்.
இந்தாண்டு கொரோனா தொற்றின் காரணமாக, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் பெருவழி பாதயாத்திரையாக 50 கி.மீ., துாரம் நிர்ணயிக்கப்பட்டது.ராமேஸ்வரம் கிழக்கு கோபுரத்தில் இருந்து துவங்கிய பாதயாத்திரை இருநாட்கள் கழித்து நேற்று 350 ஐயப்ப பக்தர்கள் இருமுடிப்பையுடன், சரணகோஷம் முழங்க மீண்டும்ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலை வந்தடைந்தனர்.ரெகுநாதபுரம் முத்துநாச்சியம்மன் கோயிலில்பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.கொரோனா தடுப்பு முன்னச்சரிக்கை நடவடிக்கையால், ரெகுநாதபுரத்தில் வேண்டுதலை ஐயப்ப பக்தர்கள் நிறைவேற்றினர். ஏற்பாடுகளை மோகன்சாமி, வல்லபை சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.