Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜெகதளாவில் ஹெத்தையம்மன் திருவிழா: ... ‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை காப்பாற்றுங்கள் ‛ஆந்திராவில் ஹிந்து கோவில்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா ஆழ்வார் மோட்சத்துடன் நிறைவு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா ஆழ்வார் மோட்சத்துடன் நிறைவு

பதிவு செய்த நாள்

05 ஜன
2021
03:01

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஆழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்தது.

வைணவ திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி விழா 20 நாட்களுக்கு விமரிசையாக நடைபெறும். இதில் முதல் பத்து நாட்கள் பகல் பத்து திருமொழித் திருநாள் என்றும் அடுத்த பத்து நாட்கள் இராப்பத்து திருவாய்மொழித் திருநாள் என்ற பெயரிலும் நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பகல் பத்து உற்சவம் கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி தொடங்கியது.  பகல் பத்து 10ம் நாளன்று ஸ்ரீ நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் சேவை சாதித்தார். முக்கிய நிகழச்சியான பரமபதவாசல் திறப்பு கடந்த 25-ம் தேதி அதிகாலை நடந்தது. அன்று இராப்பத்து உற்சவம் தொடங்கியது. 31ம் தேதி திருக்கைத்தல சேவை, ஜனவரி-1 ம்  தேதி  வேடுபறி உற்சவம் ஆகியவை சிறப்பு நிகழ்ச்சிகளாக நடந்தன.  உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் (3ம் தேதி) காலை தீர்த்தபேரர் எனப்படும் செல்வர் கோயில் சந்திர புஷ்கரணியில்  தீர்த்தவாரி கண்டருளினார்.


கண்ணிநுண்சிறுத்தாம்பினால் நா கட்டுண்ணப்

பண்ணிய பெருமாயன், என்னப்பனில் நண்ணித்

தென்குருகூர் நம்பியென்றகால் அண்ணிக்கும்

அமுதூறும் என் நாவுக்கே -  என்று மதுரகவியாழ்வார் தனது குருவானவரும் ஆழ்வார்களில் முதன்மையானவருமான நம்மாழ்வாரைப் பற்றிப் பாடி அந்த குருவருளாளே திருவருளையும், ஆழ்வார்கள் வரிசையிலே இடத்தையும் பெற்றவர். அவ்வளவு பெருமைக்குரிய நம்மாழ்வார் திருமேனியை ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருப்பாதங்களில் கிடத்தி அவரை வைகுண்டத்துக்கு அனுப்பும் வைபவம் நேற்று நிறைவு நிகழ்ச்சியாக ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்தது. அத்துடன் வைகுந்த ஏகாதசி விழா நிறைவடைந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar