இறந்தவரைப் பற்றி புறம் பேசுதல் என்பது இறந்து போன தன் சகோதரனின் இறைச்சியைப் புசிக்க விரும்புவதற்குச் சமம் என்கிறது குர்ஆன். அப்படி பேச நேர்ந்தாலும் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை பேசுங்கள். தீமை பற்றிப் பேசக் கூடாது. குறிப்பிட்ட நபரை பலர் சேர்ந்து பழித்தாலும் அதனால் ஏற்படும் பாவம் அச்செயலை யார் முதலில் தொடங்கினாரோ அவரையே சென்றடையும். ஒருவரை நிந்திக்கும் போது அச்சொற்கள் வானத்திற்குச் செல்லும். அங்கு வானத்தின் கதவுகள் அவற்றை அனுமதிக்காமல் மூடிக் கொள்ளும். அங்கு வலப்புறம், இடப்புறம் அலைந்து விட்டு, எங்கும் இடமில்லாமல் எவர் நிந்தித்தாரோ அவரிடமே திரும்பும் என்கிறார் நாயகம். இறப்புக்கு பின்னும் ஒருவரை மதிப்புடன் பேசுவதே நற்பண்பு.