கள்ளக்குறிச்சி:மணிமுக்தா ஆற்றில் இருந்து, 1 அடி உயர விஷ்ணு துர்கை அம்மன் வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த சித்தலுார் மணிமுக்தா ஆற்றில், , சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றில் இருந்து, விஷ்ணு துர்கை அம்மன் வெண்கல சிலையை எடுத்துள்ளனர். எருமை மாட்டின் தலை மீது, விஷ்ணு துர்கை அம்மன், நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். சிலையை, அங்குள்ள பெரியாயி அம்மன் கோவிலில் வைத்து வழிபட்டனர்.