தேவகோட்டை : ஆண்டுதோறும் மார்கழியில் ஒருநாள் 63 நாயன்மார்களுக்கு சிறப்பு பூஜை நடைபெறும். இந்தாண்டு தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சுவாமி அம்பாள் முன் 63 நாயன்மார்கள் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.