பரமக்குடி : சபரிமலை ஐயப்பன் கோயில் சுவாமி பிரசாதம்அஞ்சல் துறை மூலம் பக்தர்களின் வீடு தேடி வழங்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுப்பிரமணிய பாண்டியன் தெரிவித்ததாவது: சபரிமலை ஐயப்பன் கோயில் பிரசாதம் பக்தர்களின் வீடு தேடி வழங்கும் வகையில் அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது. ரூ.450 கட்டணத்தை பக்தர்கள் தங்கள் வீடுகளின் அருகில் உள்ள தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கட்ட வேண்டும். பிரசாத பைகளில் அரவணை பாயாசம், நெய், குங்குமம், மஞ்சள், விபூதி மற்றும் அர்ச்சனை செய்யப்பட்ட பிரசாதங்கள் வழங்கப்படும். மேலும் பரமக்குடி, ராமநாதபுரம் உட்பட தலைமை அஞ்சலகங்கள் முன் இன்று முதல் சிறப்பு ஸ்டால்கள் தொடங்கப்பட உள்ளதாக, பரமக்குடி விற்பனை மேற்பார்வையாளர் பாலு தெரிவித்தார்.கொரோனா பாதிப்பால் சபரிமலை செல்ல முடியாத பக்தர்கள் தங்களின் வீடுகளிலேயே பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பாக அமைந்துஉள்ளது.