நெல்லிக்குப்பம் : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குச் செல்ல முடியாத பக்தர்கள் நெல்லிக்குப்பம் அய்யப்பன் கோவிலில் நெய் அபிஷேகம் செய்து வருகின்றனர்.
ஆண்டுதோறும், கார்த்திகை, மார்கழி மாதங்களில் சபரி மலையில் உள்ள அய்யப்பனை தரிசிக்க ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி சுமந்து செல்வது வழக்கம். ஆனால், நடப்பு ஆண்டு கொரோனா பரவலைத் தடுக்க தினமும் சபரி மலையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும்.சபரி மலைக்குச் செல்ல முடியாத நெல்லிக்குப்பம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் ஏராளமானோர் தினமும், நெல்லிக்குப்பத்தில் உள்ள அருள் தரும் அய்யப்பன் கோவிலுக்கு இருமுடி சுமந்து வருகை தந்து தாங்கள் கொண்டு வரும் நெய்யால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.