சிவன் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் படி அருளிய லீலை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜன 2021 05:01
பரமக்குடி: பரமக்குடி, நயினார் கோவில் சிவன் கோயில்களில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சிவபெருமான் படியருளிய காலபைரவ அஷ்டமி விழா நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா சமேத சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயிலில் காலை 4:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள், பூர்ணாகுதி நடந்தது. தொடர்ந்து 5:00 மணி தொடங்கி மூலவர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்திற்கு பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அன்று காலை 9:00 மணிக்கு விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகன் மற்றும் ரிஷப வாகனத்தில் சுவாமி பிரியாவிடையுடன், விசாலாட்சி அம்மன் தனித்தனியாக புஷ்ப சப்பரத்தில் வீதி வலம் வந்தனர்.
*பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் காலபைரவ அஷ்டமி விழாவையொட்டி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. அப்போது சிவபெருமான் அனைத்து ஜீவராசிகளையும் காத்தருளும் லீலையாக பக்தர்களுக்கு அரிசி பிரசாதமாக வழங்கப்பட்டது.
*எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயிலில் நயினார்கோவில், நாகநாதசுவாமி கோயிலிலும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.