பல்லடம்:தைப்பூச விழாவுக்கு அரசு விடுமுறை அறிவிப்பால் ஆன்மிகம் தழைத்தோங்கும், என காமாட்சிபுரம் ஆதினம் தெரிவித்தார்.
காமாட்சிபுரம் ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கூறியதாவது:தமிழகம் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர் என, உலக நாடுகள் பலவற்றிலும் முருகனுக்கு வழிபாடு நடந்து வருகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள், தைப்பூச விழாவை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். பல இடங்களில், அரசு விடுமுறையும் கடைபிடிக்கப்படுகிறது.
தைப்பூச நாளில், தமிழகத்தில் பல லட்சம் பக்தர்கள் விரதம் இருந்து, திருச்செந்தூர், பழநி உட்பட பல முருகன் கோவில்களுக்கு பாதயாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தைப்பூச விழாவுக்கு விடுமுறை என, அரசு அறிவித்துள்ளது, பக்தர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அரசு வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பால் ஆன்மிகம் தழைத்தோங்கும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.