மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் ஊட்டி சாலையில், கல்லாறு துாரிப்பாலம் அருகே, சாரதா பிரம்ம வித்யா கேந்திராலயத்தில், சாரதாதேவியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.சிறப்பு பூஜை, பஜனை நடந்தன; ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். இவர்களுக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. சாரதா பிரம்ம வித்யா கேந்திரத்தின் சார்பில், கல்லாறு மலைவாழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும், குழந்தைகளுக்கு நீதிபோதனை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.