பதிவு செய்த நாள்
07
ஜன
2021
10:01
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலில், மார்கழி தேய்பிறை அஷ்டமி நாளான நேற்று, ஏராளமான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய செய்தனர். அவர்கள், பூசணியில் தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. பகல், 12:00 மணிக்கு, உற்சவ தட்சணகாசி காலைபைரவர், கோவிலை சுற்றி, மூன்று முறை தேரில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. இதேபோல், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் சன்னதியில் உள்ள பைரவருக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நேற்று சிறப்பு பூஜை நடந்தது.
கல்லுக்குறிக்கியில்: கிருஷ்ணகிரி அருகே, கல்லுக்குறிக்கி பெரியஏரி மேற்கு கோடியிலுள்ள காலபைரவர் கோவிலில், நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. காலை, 7:00 மணிக்கு காலபைரவருக்கு, யாகங்கள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பகல், 12:00 மணிக்கு, காலபைரவர் உற்சவம் நடந்தது.