பதிவு செய்த நாள்
07
ஜன
2021
10:01
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கையாக, 91.78 லட்சம் ரூபாயை, காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பவுர்ணமி முடிந்ததும், பக்தர்கள் செலுத்திய, உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, மார்கழி மாத பவுர்ணமி முடிந்த நிலையில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில், கடந்த ஒரு மாதத்தில், 91 லட்சத்து, 78 ஆயிரத்து, 218 ரூபாய், 119 கிராம் தங்கம், 519 கிராம் வெள்ளி ஆகியவற்றை, காணிக்கையாக, பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.