Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா ... பழநி தைப்பூச விழா பக்தர்களுக்கு கட்டுப்பாடு பழநி தைப்பூச விழா பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அயோத்தி ராமர் கோவில்: ஆர்.எஸ்.எஸ்.,புகழாரம்
எழுத்தின் அளவு:
அயோத்தி ராமர் கோவில்: ஆர்.எஸ்.எஸ்.,புகழாரம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2021
10:01

 காந்திநகர்: நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக, அயோத்தியில் கட்டப்பட உள்ள ராமர் கோவில் விளங்கும் என, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தெரிவித்துள்ளது.

குஜராத்தில், உள்ள காந்திநகரில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்ற, மூன்று நாள் கூட்டம் நடந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், பா.ஜ., தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உட்பட, பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள், தீர்மானங்கள் குறித்து ஆர்.எஸ்.எஸ்., இணை பொதுச் செயலர் கிருஷ்ண கோபால் கூறியதாவது: அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில், நாட்டின் சுயமரியாதை மற்றும் கவுரவத்தின் சின்னமாக விளங்கும். அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்காக நடந்த அடிக்கல் நாட்டு விழா, நாட்டின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்துள்ளது.

ராமர் கோவில் கட்டும் பணியில், நாட்டு மக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, ஆர்.எஸ்.எஸ்., விரும்புகிறது. இதற்காக, ஐந்து லட்சம் கிராமங்களில், 10 கோடிக்கும் அதிகமான குடும்பங்களை தொடர்பு கொண்டு, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்பு கள், நிதி வசூலிக்கும். தனிப்பட்ட நபரிடம், 10 ரூபாயும், ஒரு குடும்பத்திடம், 100 ரூபாயும் வசூலிக்க முடிவு செய்து உள்ளோம். மொழி, ஜாதி, பிறப்பு ஆகியவற்றால், ஹிந்துக்களிடம் ஏற்பட்டுள்ள வேற்றுமைகளை போக்கி, ஒற்றுமையை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று; அனைவரும் சரிசமமானவர்கள் என, ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள், மக்களிடம் பிரசாரம் செய்வர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு:
கூட்டுக் குடும்பமாக வாழும், ஹிந்து கலாசாரத்தின் பெருமையை, மக்களிடம் எடுத்துக் கூறவும் முடிவு செய்யப் பட்டுள்ளது. ஏனெனில், நாட்டில், கூட்டுக் குடும்ப வாழ்க்கை மறைந்து வருகிறது. குடும்பங்கள் உடைவது, சமூகத்துக்கு நல்லதல்ல. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மரக்கன்றுகள் நடுதல், நீர்நிலைகளை பாதுகாத்தல் உட்பட, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதன் பல்வேறு அமைப்புகள் ஈடுபடும். இவ்வாறு, அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
புதுச்சேரி, கவுசிக பாலசுப்பிரமணியர் கோவில் சஷ்டி நிறைவு விழாவை யொட்டி வள்ளி, தெய்வானை சமேத கௌசிக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar